குறும்புக்கண்ணன்


அன்று காலையிலேயே நான் குளித்து மலர்ச்சியோடு காப்பியை நீட்டியதுமே என் கணவர் கேட்ட முதல் கேள்வி, 'இன்னைக்கு என்ன விசேஷம் ?' என்பது தான். 'நேத்தே சொன்னேன்ல இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி பா, உங்களுக்கு எந்த நல்ல  லீவு இல்லை பின்ன எப்படி ஞாபகம் இருக்கும் ' என்றவுடன் சரி சரி கூல் என்றபடியே குளிக்கசென்றுவிட்டார். அலுவலகம் போகும் முன் முடிஞ்சா குட்டி செல்லத்துக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு போட்டோ எடு என்று சொல்லிவிட்டு சென்றார்.

கிருஷ்ணர் வேஷம்  தானே பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று என் ஒண்ணே கால் வயதே நிரம்பிய மகன் நிரூபித்தான்.முகத்தில் கண்மை போட்டு ஒரு நாமத்தை போட்டால் பாதி வேலை முடிஞ்சு போச்சு, ஆனால் குளித்து  முடித்து  வெளியில்  வரும் போதே பசியில்  அழுததால் போட முடியாமல் போனது, தூங்கியதும் போடலாம் என்று எண்ணியதை எப்படியோ அறிந்து கொண்டு அன்று பார்க்க அவன் சிறிதும்  விழி மூடாமல் என்னை சோதித்தான்

அம்மாவுக்காவது எதாவது பட்சணம் செய்ய உதவலாம் என்று   சமையல் அறைக்குள் நான் நுழையும் முன்னரே அவன் ஓடி அங்கு பொடித்து வைத்திருந்த வெல்லத்தை தரை எங்கும் சிதறடித்து  கையால் மேலும் தட்டி  சிரித்து கொண்டு இருந்தான், என் அம்மாவின்  மிரட்டல்களுக்கு சற்றும் செவி சாய்க்காமல் அவன் வேலையை கருத்தாய்  செய்து கொண்டிருந்தான். அவனை தூக்கி  கையை கழுவி  அனுப்பி வைத்துவிட்டு  மேடையில் இருந்த மற்ற சாமான்களை   தள்ளி வைத்து விட்டு  திரும்பி பார்த்தால்  அவன் கையில் எண்ணை கிண்ணம், எந்த   நேரமும்  வழிய தயாராய் அபாய நிலையில் இருந்த கிண்ணத்தை ஓடி போய் வாங்கி  வைப்பதற்குள் எனக்கும் அம்மாவுக்கும் மூச்சு முட்டி அம்மா என்னிடம் தாயே நீ எனக்கு ஒரு உதவியும் செய்ய வேணாம் உன் மகனை பாத்துக்கோ போதும் என்று ஒரு கொடையை எனக்கு அளிக்கும் படி செய்த்தான்.

சரி இனி நேரம் தாழ்த்தி பிரயோஜனம் இல்லை கழத்தில் இறங்கி விட வேண்டியது தான் என்று எண்ணி அவன் பின்னாடியே ஓடி எதிர் வீட்டு அக்கா, பின் வாசல் கொய்யா மரம் பூனை என்று எதை எதையோ சொல்லி  சாந்து  பொட்டால் ஒரு நாமத்தை போட்டு விட்டு, அடுத்த ஸ்டெபான பெரிய வெள்ளை நாமம போட பௌடரை  கரைப்பதர்க்குள் அவன் நெற்றி கைகள்  செவ்வானமாய் சிவந்தது கிடந்ததது.குளிக்கும் போதே முகம் துடைப்பதற்குள் உலகம் ரெண்டு படும் இப்போது கேட்கவும் வேண்டுமா, பேசாமல் ஒரு துணியில் தண்ணீரை  நனைத்து துடைத்துவிடலாம் என்று எண்ணி அவனை அமர வைக்க டிஸ்கவரியில் புலியையோ சிங்கத்தையோ தேடினால் நாலு நாட்களுக்கு முன் இறந்து போயிருந்த எதோ ஒரு பிராணியை வாயில் போட்டு கொண்டிருந்தான் சற்று முன் சாப்பிட்ட தயிர் சாதமும் மாங்காய் ஊர்காயும் வெளிவரும் முன் சேனலை மாற்றி விட்டு திரும்பி  பார்த்தால் அவன் மாடி படி ஏறி இருந்தான், அவன் பின்னாடி அவசரமாய் ஓடி அவனுக்கு துடைத்து முடிப்பதற்குள் நான் சீக்கிரமே கரிஸ்மா கபூர் அளவுக்கு மெலிந்தது விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.அரை மணி நேரம் ஆகியும் தொடங்கிய அதே இடத்தில் நான்.


ஓடிக்கொண்டிருந்த பொது எனக்கு ஒரு யோசனை, பாரின் போன என் சித்தப்பா பையன் வாங்கி தந்த மேக்கப் கிட்டில் உள்ள உதட்டுசாயத்தை பேசாமல் நாமம் போடா பயன்படுத்தலாமே என்று தோன்றிய உடன் அதை தேடி கண்டு அந்த கிட்டை அவன் கையில் கொடுத்து(மூடி தான்) அந்த நேரத்தி லே நாமத்தை போட்டு முடித்தேன். வெள்ளை நாமம் போட்டு உள்ளதையும் சொதப்பி தொலைக்க வேண்டாம் என்று அதை கைவிட .முடிவு எடுத்தேன்.இனி முகத்திற்கான முக்கியமான கடைசி மேக்கப், கண்மை போடுவது.

கண்மை போட்டு முடிப்பதற்குள் பாதி பாத்திரங்கள் சமையல் அறையில் இருந்து வீட்டின் சகல மூலைகளுக்கும் இடம் மாறி இருந்தது, இந்த சாகசத்தில் ஈடுபட்டு நானும் கொஞ்சம் கருப்பாகி இருந்தேன், காதில் கொய் என்று சத்தம் வேறு பாத்திரங்களில் கரண்டிகளை கொண்டு தட்டி அந்த இசையை ரசித்து  பெருமையாய் சிரித்த அவனை பாராட்டி ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு நகைகளை போட  முடிவெடுத்தேன்.

இரண்டு செயின்களை சுலபமாய் போடு விட்டு கொஞ்சம் சின்னதாய் இருந்த முத்து மாலையை போட்டு முடிப்பதற்குள் ஓடினான், மாலை கிரீடம் போல அவன் தலையில் நின்றது அட அதை அப்படியே விட்டால் கூட அருமையாய் இருக்கும் போல என்று நினைபதற்குள் அது அவன் கைக்கு வந்து சுழற்றி எறியப்பட்டது, அவன் எறிந்த வேகத்தில் அது சிதறாமல் தப்பித்ததே பெரும் பாகியம்.எனினும் விக்ரமாதித்யன் போல சற்றும் மனம் தளராமல் மாலையை மறுபடியும் அவன் தலையில் வைத்தால் அது வழுக்கி கொண்டு கழுத்தில் விழுந்தது. கையில் ப்ரசெலேட் போடலாம் என்றால் ஆறு மாதம் முன் வாங்கிய அது பத்தாமல் போய் பாடாய் படுத்தியது.சரி இத்துடன் நகைகளை முடித்து கொண்டு உடைக்கு சென்றேன்.

ஏற்கனவே ரெடிமேடில் அவனுக்கு பஞ்சகசம் இருந்தது ஆனால் அது சிகப்பு நிறம், வெள்ளையில் கட்ட பட்டு துண்டும் எட்த்து வைத்து அதை கட்ட அம்மாவை அழைத்தேன், நானும் அம்மாவும் பத்து நிமிடமாய் முயன்று தோற்று கடைசியில் கண்ணனுக்கு சிகப்பும் பிடிக்குமே என்று சொல்லி மனதை தேற்றி கொண்டு சிகப்ப பஞ்சகச்சத்தையே போட்டு என்னுடைய நீண்டநேர மேக்கப் செச்ஷுனை முடித்துக்கொண்டேன்.கிரீடம்  ஒன்று இருந்தது ஆனால் அதை அவன் தலையை தவிர எல்லா இடங்களிலும் வைத்தான்,கண்ணனுக்கு குழல் வேண்டுமே அது இல்லையே என்ற நினைத்து வருந்தும் போது அவன் என் செல்போனை எடுத்து வைத்திருந்தான், ஆகா இவன் கலியுக கண்ணன் அல்லவா செல்போன் போதும் இவனுக்கு என்று எண்ணி கேமராவுடன் கழத்தில் இறங்கினேன்.

அவ்வளவு நேரம் சிரித்து சிரித்து விளையாடியவன் அப்போதில் இருந்து சிரிக்காமல் என்னை சோதித்தான்.வெகு நேரம் முயன்றும் வேறு வழி இல்லாமல் ஒரு போட்டோவை எடுத்து முடித்து விட்டு பார்த்தால் அவனை சுற்றி ஒரே ஈரம், ஆகா டியபர் போடா மறந்தோமே என்று நொந்தபடி மேலும் இரு தூரத்து ஷாட்களை எடுத்து மென் கிருஷ்ண ஜெயந்தி சாகசங்களை முடித்து கொண்டேன். அம்மா கண்ணன் பாதங்கள் வைக்கணும்டி அப்ப தான் இணைக்கு நாள் நிறையும் என்று சொன்னதால் மாவால் பாதம் போட போட இவன் அதை இழுவி அளித்து மேற்கொண்ட  செய்த செயல்களால் வேறு வழி இல்லாமல் சாக்பிஸ் கொண்டு பாதம் போட்டோம். நல்ல வேளை என் கணவரின் ஐடியா படி அவன் கால்களில் மாவை முக்கி பாதம் போட்டிருந்தால் வீடே மாவாகி இருக்கும்.

இரவில் வீடு வந்த கணவரிடம் போடோக்களை காட்டி மகன் செய்த சேட்டைகளை சொன்னேன், இவ்வளவு முயன்றும் கண்ணனை போல இவன் இல்லையோ என்று நான் கேட்ட போது அவர் சொன்னார் கண்ணனுக்கு அழகு அவன் அணிந்த ஆபரணங்களில் இல்லை அவன் செய்த குறும்புகளில் தான் அதனால் நம் கார்த்தி குட்டி குறும்பு கண்ணன் தான் நி கவலை படாதே என்றார்.இதை விட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும் இந்த யசோதைக்கு.

0 comments: