![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNZIWmtRrt-_Iqm5P7rJEwzYYqXtFGa-cXhYIaEWSqnhOai8KvRAwm-u8FW4rlt-p3pwr8_KG8P1Zf7TZHhBC-VtLatkc9YK56C3dO9E5hnMX_KcmRKrtdfc6h7pDMj2Mvl4G2rOLwbLMV/s320/jallikattu.jpg)
ஏறு பிடித்து வீரம் காட்டினான் ஆண்
அவன் மனதை படித்து நாணத்தில் திளைத்தாள் பெண்
தெம்மாங்கு பாடி நாத்து நட்ட காலம் ஒன்று
தெருவாசல் கோலமிட இடமில்லை இன்று
பயிர்களை தழுவி மகிழ்ந்தான் உழவன் அப்போ
அவன் மரணத்தை தழுவிய செய்தியறிகிறோம் இப்போ
ஏறு தழுவ தடை விதித்தது அரசு
அதை உடைக்க பாடுபட்டு ஊரெங்கும் முழங்குது முரசு
அரிசி சர்க்கரை ஏலத்தோட
பொறுமையும் போராட்டமும் சேர்த்தோம் பொங்கலோடு
பொங்கியது புரட்சி பொங்கல்
மெரினாவில் தங்கியது பல இளைய தலைகள்
ஜாதி மத குலம் துறந்து வந்தோம் வீதிக்கு
தடையை தகர்த்து எறிவதே எங்கள் இலக்கு
தமிழனே அமைதியாய் புரிந்தாய் நீ பல புரட்சிகள்
அதற்கிந்த எளிய தமிழச்சியின் அன்பு வணக்கங்கள்
3 comments:
Nalla iruku akka
என் இனியாளுக்கு இல்லை இணை ஆள்...
Welcome back!
Post a Comment